அந்த மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள வலயமான பஸிர் குடாங் பிராந்தியத்திலுள்ள 15 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 75 பேர் சுவாசப் பிரச்சினைகள், வாந்தி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அந்தப் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை நாளை வியாழக்கிழமைவரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பிராந்தியத்தில் மாணவர்களுக்கு எதனால் நஞ்சேற்றம் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஆறொன்றில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட 40 தொன்னுக்கும் அதிகமான இரசாயனக் கழிவுகளால் பெருமளவு சிறுவர்கள் உட்பட சுமார் 4,000 பேர் சுகவீனமுற்றிருந்தனர். இந்நிலையில் அந்த சம்பவத்துக்கும் பிந் திய சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேற்படி மாணவர்கள் சுகவீனமடைந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் சூளுரைத்துள்ளார்.