நஞ்சூட்டல் காரணமாக மலேசியாவில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.

அந்த மாநி­லத்தில் தொழிற்­சா­லைகள் அமைந்­துள்ள வல­ய­மான பஸிர் குடாங்  பிராந்­தி­யத்­தி­லுள்ள 15 பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்கள் 75 பேர்  சுவாசப் பிரச்­சி­னைகள், வாந்தி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து  வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­களை  நாளை வியா­ழக்­கி­ழமைவரை மூட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் மாண­வர்­க­ளுக்கு எதனால் நஞ்­சேற்றம்  ஏற்­பட்­டது என்­பதைக் கண்­ட­றிய அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஆறொன்றில் சட்­ட­வி­ரோ­த­மாக கொட்­டப்­பட்ட 40 தொன்­னுக்கும் அதி­க­மான இர­சா­யனக் கழி­வு­களால் பெரு­ம­ளவு சிறு­வர்கள் உட்­பட சுமார் 4,000 பேர் சுக­வீ­ன­முற்­றி­ருந்­தனர். இந்­நி­லையில்  அந்த சம்பவத்துக்கும் பிந் திய சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேற்படி மாணவர்கள் சுகவீனமடைந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் சூளுரைத்துள்ளார்.