26ம் திகதி உண்ணாவிரதம், 28 ம்திகதி ஹர்த்தால்- தமிழ்கட்சிகள்தீர்மானம்

தியாகதீபம் திலீபனின் நினைவு தினமான 26 ம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்தேஇந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்துஅவசரமாக ஒன்றுகூடிய பத்துதமிழ்கட்சிகள் இது குறித்துதீர்மானித்துள்ளன.

6ம் திகதி திலீபனின் நினைவேந்தல்நிகழ்வை ஆலயங்களில் விசேடபூஜைகள்மூலமும் வீடுகளில்இருந்தவாறும் நினைகூறுமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

அன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டுமணிமுதல் மாலை ஐந்துமணிவரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் 28 ம்திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.