21 பைகள் அடங்கிய அமோனியா நைட்ரேட்டை காவல்துறையினர் கைப்பற்றினர்

அஸ்கிரிய காவல்துறை பிரிவில்  ஓரிடத்தில் மறைத்து வைக்கப்பட்ட அமோனியம் நைத்திரேட் அடங்கிய 21 பொதிகளை கண்டி காவல்துறையினர் கைப்பற்றினர்.

விசாரணையின் போது, இவை தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் ஒரு சிரேஸ்ட இராணுவ அதிகாரி தெரிவிக்கையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களில் அமோனியா நைத்ரேட் ஒன்றாகும்  என்று கூறினார். கண்டி காவல்துறை தலைமையகத்தின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஒரு காவல்துறை குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.