ஸ்ரீலங்காவில் ஊரடங்குச் சட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என புத்தளம் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக மறு அறிவித்தல் வரும் வரை புத்தளம் மற்றும் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.