வெளிநாட்டு பயணிகள் இலங்கையில் நுழைவதற்கு அனுமதி மறுப்பு

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கையினுள் உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலிற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 28பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 15 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 204பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.