வெலிக்கடைச் சிறையில் துப்பாக்கிச் சூடு: சிறைக் காவலரும் கைதியும் படுகாயம்

கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் சிறைக்காவலர் ஒருவரும் கைதி ஒருவரும் படுகாயமடைந்ததனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெரோயின் வழக்கில் கைதுசெய்யப்பட்ட கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தவேளையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.