சிறீலங்காவில் சிங்கள சமூகத்தவர் கொண்டாடும் வெசாக் பௌத்த விழாவில் கலந்து கொண்ட சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சா கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு கொண்டுவந்த விதிகள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை என கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
முகக் கவசங்கள் அணிந்த போதும், கூட்டமாகவும், ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகவும் நேற்று இரவு இந்த விழாவில் கலந்துகொண்டவர்கள் நின்றதும், இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொனபோல பகுதியில் உள்ள ஒலபோடுவ ராஜ மகா விகாரையில் இடம்பெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் சிறீலங்கா அரச தலைவர் கலந்துகொண்டிருந்தார்.
திவியகாக யசாசி தேரர் மற்றும் ஒலபொடுவா தம்மிக்கா தேரர் ஆகிய துறவிகள் உட்பட பெருமளவானவர்கள் இதில் கலந்துகொண்டனர்.