வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு!!வீடியோ இணைப்பு

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1086நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம்ஆண்டு இதேநாளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களிற்குமிடையில் அலரிமாளிகையில் சந்திப்பு இடம்பெற்று மூன்றுவருடங்கள் கடக்கின்ற நிலையிலும், எமக்கு வழங்கிய உறுதிமொழிகள் வழங்கப்படவில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.