வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழுமையாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேவளை வவுனியா பொலிசாரால் 8 பேர் கைதுசெய்யபட்டுள்ளதுடன் அவர்களில் 6 பேர் போக்குவரத்து விதி மீறல் குற்றங்களிற்காகவும் இருவர் அவசியமின்றி வீதிகளில் திரிந்தமைக்காவும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை ஆதரவற்ற பிச்சைகாரர்கள் செல்ல வழியில்லாமல்வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் உணவின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.வவுனியாவில் வேலைநிமித்தம் வருகைதந்த சிலர் தமது சொந்த ஊர்களிற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்றி வீதிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அவர்களிற்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிபத்திரம் பொலிசாரால் வழங்கப்பட்டுள்ளது.

DSC02194 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

DSC02207 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

DSC02233 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!

DSC02241 1 வவுனியா முடக்கம்!! ஒரு சில பயணிகள் அவதி.8 பேர் கைது!!