வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இன்றைய தினம் நகரை நோக்கி வருகை தந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதை அவதானிக்ககூடியதாக இருந்தது. நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளிலும், காமினி மகா வித்தியாலய மைதானத்தினுள்ளும் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இதனால் விவசாயிகள் குறித்த பகுதிகளில் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தியிருந்தனர்.

மேலும் மருந்தகங்கள்,வங்கிகள், வியாபாரநிலையங்களில் பொதுமக்கள் நீண்ட
வரிசையில் நின்று தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவுசெய்திருந்தனர்.

நான்கு நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டமையால் அதிகமான மரக்கறிவகைகள் நகரில் தேங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

இதேவளை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

aaa 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a5 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a4 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a3 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a3 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.

a2 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் கள நிலவரங்கள்.