கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு அமைய கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிற்கான பொருட்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டதுடன், நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வவுனியா நகரை நோக்கி மக்கள் வருகை குறைவாக இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை சுகாதார திணைக்களத்தினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டதோடு விழிப்புனர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பலபொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததுடன் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.