வவுனியாவில் இளநீர் பெரும் தட்டுப்பாடு!! ஒரு இளநீர் 100 ரூபாய் வரையில் விற்பனை!!

வவுனியாவில் இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு இளநீர் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் வெப்பத்தை தணிப்பதற்காக இளநீரை பருகுவோரின் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சராசரியாக ஒரு செவ்இளநீர் 80 ரூபாய் முதல் நூறு ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், தட்டுப்பாடும் நிலவிவருகிறது.

அதிகமாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்தே வவுனியாவிற்கு இளநீர் கொண்டுவரப்பட்டு வியாபாரிகளிற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களது வருகை குறைவடைந்துள்ளமையால் இறளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வழமையாக தென்பகுதிகளில் இருந்து வாகனங்களில் இளநீர் கொண்டுவந்து எமக்கு வழங்கபடும்.தற்போது வியாபாரிகளது வருகை குறைவடைந்துள்ளமையால் இளநீரை பெற்றுகொள்வதில் அசௌகரியங்களை சந்திப்பதாகவும், இதனால் அதன் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகவும் இளநீர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்