வவுனியாவில் இரத்தமாதிரிகள் மீண்டும் சேகரிப்பு

வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும் சுகாதாரவைத்திய அலுவலகத்தால் இரண்டாம் கட்டமாக இன்றுமுன்னெடுக்கப்பட்டது.

கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளை கொண்டிருந்த வவுனியாவை சேர்ந்தவர்களிற்கு கொரோனோ வைரஸ்தாக்கம் இருக்கின்றதா எனசோதனை செய்வதற்கான இரத்தமாதிரிகள் சேர்க்கும் நடவடிக்கை கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் இரண்டாம் கட்ட பணிகள் இன்றயதினமும்
முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவின் காத்தான்கோட்டம் மற்றும் ஓமந்தை,புளியங்குளம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களிடமே குறித்த இரத்தமாதிரிகள் சேர்ககப்பட்டுள்ளதுடன் அவை மேலதிக பரிசோதனைக்களிற்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.