வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுள்ள மாபெரும் மக்கள் எழிச்சிபேரணிக்கு ஆதரவு கொடுப்போம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் ஒவ்வொருவருடமும் ஆவணி 30ஆம் திகதி நினைவு கூறப்படுகிறது.

இவ்வாண்டு அந்நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி மாபெரும் எழுச்சிப் பேரணி நடைபெற உள்ளது.

வடக்கு மாகாணத்தில் வவுனியா A9 வீதியில் பன்றிக்கெய்த குளம் விநாயகர் ஆலயத்தில் தொடங்கி ஒமந்தை இராணுவ சாவடியில் இப்பேரரசு நிறைவுபெறும்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கல்முனை தரவைப் பிள்ளையார் கோவிலில் காலை 10மணிக்கு ஆரம்பமாகி கல்முனை தமிழ்பிரதேச முன்றலில் நிறைவுபெறும்.

இம் மாபெரும் எழுச்சி பேரணியை முன்னிட்டு வடக்குகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பால் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அதில் இப்போராட்டத்திற்கு இளைஞர்கள், அரச அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், வர்த்தகசங்க தொழிலாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேட்டுகொண்டனர்.

அத்துடன் 10வருடங்கள் ஆகியும் தமது உறவுகள் பற்றி எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை.

இராணுவத்திடம் கையால் ஒப்படைக்கப்பட்ட உறவுகள், சரணடைந்தவர்கள், இராணுவத்தாலும் துணைஇராணுவ குழுக்களாலும் கடத்தப்பட்ட உறவுகள் எங்கே?

அவர்களுக்கு என்ன நடந்தது?

அரசு இந்தக் கேள்விகளுக்கு உண்மையை கூறவேண்டும்.

பலமுறை அரசாங்கத்திற்கு அறிக்கை, மகஜர் கொடுத்துள்ளனர். ஐனாதிபதியை நேரில் சந்தித்தார்கள். ஆனால் எந்த பலனும் இல்லாமல் சர்வதேசத்தையும் சர்வதேச கலப்பு நீதிமன்றத்தையும் நம்பியிருப்பதாக கூறினார்கள்.

எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இதுவரை 38 பேருக்கு மேல் தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் என்ற எதிர்பார்ப்புடன் உயிரை இழந்துள்ளார்கள்.

Omp வேண்டாம் ,குற்றவாளிகளின் உள்ளக விசாரணை வேண்டாம்,சர்வதேசமே தலையிடு போன்ற விடயங்களை குறிப்பிட்டு யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கான நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஊடக அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

புலத்திலும் அவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் வெடிக்கட்டும்!

நன்றி: சிவந்தினி பிரபாகரன்