வன்முறை நடைபெறக் கூடிய பகுதிகளில் அதிரடிப்படை

தேர்தல் வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறைகள் இடம்பெறும் எதிர்பார்க்காத போதிலும் பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசேடஅதிரடிப்படையினரை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையே பயன்படுத்தப்போவதாகவும் படையினரை பயன்படுத்தப்போவதில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.