வனவிலங்கு பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது காவல் துறை துப்பாக்கி பிரயோகம்.

லுணுகம்வெஹர – வனவிலங்கு பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த மூவரை கைது செய்வதற்காக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.<br /> <br />காவற்துறை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.<br /> <br />நேற்று மாலை குறித்த மூன்று பேரும் வனவிலங்கு பூங்காவிற்குள் நுழைந்ததாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.<br /> <br />இதற்கமைய வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.<br /> <br />இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டின் போது ஒருவர் காயமடைந்துள்ளார்.<br /> <br />சம்பவத்தில் காயமடைந்தவர் தனமல்வில மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.