வடக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு;21 பேர் பலி

தாய்லாந்தில் படை வீரர் ஒருவர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த் தோம்மா, ஒரு படை முகாமில் இருந்து ஆயுதங்களைத் திருடுவதற்கு முன்பு தனது மூத்த அதிகாரியைக் கொன்றார்.
110824554 bc4a239e 7d24 4b91 b094 5c6bcd2e1ae4 வடக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு;21 பேர் பலி
பிறகு, அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்ற சந்தேக நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.

தாக்குதலுக்கு உள்ளான வணிக வளாகம் தற்போது பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தப்பியோடி மறைந்திருந்த இந்த படையினர் பாதுகாப்புப் படையினரால் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியமுடிகிறது.