வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள மாற்றம்!

நாடளாவிய ரீதியில் 10 மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு,கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு,மட்டக்களப்பு,புத்தளம்,ஹம்பாந்தோட்டை, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் செயாளர்களே இடமாற்றப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் ஓய்வுபெறவுள்ளநிலையில் அவரின் இடத்துக்கு தற்போது கிழக்கு மாகாண சபையில் பணியாற்றி வரும் கலாமதி பத்மராஜா நியமிக்கப்படவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக கடமையாற்றும் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் செயலாளராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் கொழும்பில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று அனர்த்த முகாமைத்துவபிரிவின் மேலதிக செயலாளராக பணியாற்றிவரும் எஸ்.அமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மாவட்ட செயலாளர்களின் விபரங்கள் தெரியவரவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.