வசாவிளானில் குண்டு வெடிப்பு சிப்பாய் பலி இருவர் காயம்

யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று (01) மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவத்தின் பிரதிப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொசான் செனிவரத்தினா தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் மெலும் தெரிவித்துள்ளார்.