லைபீரியாவில் பாடசாலையில் தீவிபத்து 28 பேர் பலி

லைபீரிய தலைநகர் மொன்ரோவியாவின் புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிறுவர்கள் பலர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கு அருகில் குர்ஆன் கற்கும் மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தவேளை கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த தீ பரவியுள்ளது. மேலும் உடல்களை தேடி வருவதாக பொலிஸார் அந்த சம்பவத்திற்கு பின்னர் கூறியிருந்தனர்.

இதில் 2 ஆசியர்கள் மற்றும் 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான மாணவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்குள்ளானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கோளாறு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பொலிஸ் பேச்சாளர் மோசஸ் காட்டர், இது குறித்து விசாணை நடத்தி வருவதாக கூறினார்.

இதனையடுத்து, அந்நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.