ரணில் – மைத்திரி மீதும் விசாரணை வேண்டும்: பொன்சேக்கா

சிறீலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்யவேண்டும் என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

நேற்று (05) ஊடகவியலாளர்களுடன் கம்பக பகுதியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்ட ஒழுங்கு தொடர்பாக பணியாற்றிய முன்னாள் அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் தென்னிலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியினால் பல வன்முறைகள் ஏற்பட்டுவருவதுடன், கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கும் இந்த அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.