ரணில் அரசு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை

கடந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.