ரணிலின் விருந்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பினர்

நல்லாட்சி அரசாங்கத்தின் 4ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று அலரிமாளிகையில் நடத்திய விருந்துபசாரத்தில் சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீர, ஹரின் பெர்னான்டோ மற்றும் புத்திக பத்திரன ஆகியோரைத் தவிர ஏனைய ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாத்தறையில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டதால், இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லையென ஐ.தே.வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இரவு விருந்திற்கு ஐ.தே.க யிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியனவும் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், இ.துரைரட்ணசிங்கம், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.