யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் வேம்படி  மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் இன்று(31) பெரும் பரபரப்பான நிலை தோன்றியுள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிட்டு  கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அப்போது குறித்த கல்லூரியின் அதிபர் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிவித்து அவரது வீட்டு முகவரி தபால் ஊழியரிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கடிதம் முன்னாள் அதிபரின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபர் அதனை வாசித்த போது, வேம்படி மகளிர் கல்லூரியில் அடுத்த மாதம் குண்டுத் தாக்குதல் நடைபெறவுள்ளதாகவும், இதனை ஐ.எஸ் அமைப்பினர் மேற்கொள்ளவுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த விடயத்தை கல்லூரியின் தற்போதைய நிர்வாகத்திற்கு அவர் தெரியப்படுத்தியதுடன், யாழ். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.