யாழ் விடுதியொன்றில் 39 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று படையினரால் சுற்றிவளைப்பை அடுத்தே 39 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து படையினர் சுற்றிவளைத்தனர்.

படையினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 39 இளைஞர்கள் வ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.