யாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் காலமானார்

யாழ். மாநகரசபையின் முன்னாள் மேயரும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையுமான ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும், பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய ராஜா விசுவநாதன் நேற்று அவுஸ்திரேலியா சிட்னி நகரில் தனது 94ஆவது வயதில் காலமானார். 1979 தொடக்கம் 1983 வரை யாழ்ப்பாண மாநகர சபை மேயராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.