யாழ்.சாவகச்சேரியில் மாவை சேனாதிராசா முன் தீக்குளிக்க முயற்சி

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர் களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் சாவகச்சேரி நகர சபை மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

PHOTO 2019 09 05 09 36 09 யாழ்.சாவகச்சேரியில் மாவை சேனாதிராசா முன் தீக்குளிக்க முயற்சிஇன்று இடம்பெற்ற அசம்பா விதங்களை தொடர்ந்து நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் தெருவிக்கின்றன