யாழில் பட்டிமன்ற நடுவராக களமிறங்கிய சுமந்திரன்!

உடுவில் றோஸ்வில்லாவில் இன்றையதினம் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொண்டார்

தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சியடைந்தனவா? அல்லது தற்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளனவா எனும் தலைப்பில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்ற நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் இந்தநிகழ்வில் பறை இசை, குழலிசை ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் நாடாளுமுன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.