தமிழகத்திலும் தமிழீழ உறவுகளுக்காய் ‘எழுகதமிழ்’!

தாயகத்தில் நடைபெறும் எழுக தமிழ் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழகத்திலும் எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்கிறது தமிழ் நாடு வணிகர் சங்கப் பேரவை என்ற அமைப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்கும் முகமாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த. வெள்ளையன் இதனை ஒருங்கிணைத்து வருகிறார்.

இதில் கட்சி கொள்கைகளைக் கடந்து பல்வேறு ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகள் கலந்துகொள்ளுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

மொழியின் பெயரால் ஒன்றுபட்ட தமிழர்களாக எமக்கான உரிமைகளுக்காக ஒருமித்த குரலில் போராடுவது தமிழரின் காலக்கடனாகும்!