மூதூர் தனிமைப்படுத்தல் முகாமில் இரு வயோதிபர்கள் மரணம்

மூதூரில் சிறீலங்கா வான்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாமினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களில் இரு முதியவர்கள் இன்று (1) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணசிங்கபுர பகுதியில் உள்ள முகாமில் இருந்த 80 வயதுக்கு மேற்பட்ட இருவரே மரணமடைந்துள்ளனர். அவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சிறீலங்கா வான்படையினர் தெரிவிக்கின்றபோதும், கோவிட்-19 நோய் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.