முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த தமிழ் மாணவி மரணம்

கடந்த ஏப்பிரல் மாதம் மட்டக்களப்பு சியோன் தேவாலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் மாணவி மரணம் அடைந்துள்ளார்.

முஸ்லீம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்லில் காயமடைந்த கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவி கருணாகரன் உமாசங்கரி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (11) மரணமடைந்துள்ளார்.

குண்டுத்தாக்குதலில் பெருமளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், தமிழ் மக்களே பெருமளவில் காயமடைந்துமிருந்தனர். இந்த நிலையில் சிறீலங்கா அரசு படுகாயமடைந்த தமிழ் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதை புறக்கணித்து வந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.