முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.

தமிழகத்திலிருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதா  கட்சி நிர்வாகிகள் யாழ்ப்பாணம் சங்கிலி மன்னனின் 400 ஆவது ஆண்டு  விழாக் குழு விடுத்த அழைப் பின் பெயரில் இலங்கைக்கு பயணம் மேற்கொண் டவர்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு (26)நேற்று  முல்லைத்தீவு மாவட்ட த்திற்கு சென்று பல இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான அருண் உபாதெயாய, தீட்சாக்கௌசிக் ,தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத்,மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழு பேர் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

Arjun முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்

நேற்று (26) மாலை இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண் டுள்ளார்கள்.