முன்னாள் போராளிகள் பற்றி ஐ.நா. கவனம் எடுக்க வேண்டும்

முன்னாள் போராளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (08) அன்று பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் (TID) தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விசாரணைக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து 05ஆம் திகதி காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, முன்னாள் போராளிகளின் பாதுகாப்புகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடியளவு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் போராளிகள் கட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் சசிதரன்  கேட்டுள்ளார்.