முகமாலையில் குண்டு வெடிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இரும்பு பொறுக்கிய நபா் ஒருவா் அங்கிருந்த பழைய வெடிபொருள் ஒன்றை எடுக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் கையை இழந்துள்ளாா்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இன்று நடந்துள்ளது.  வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் இரும்புத் துண்டுகள் பொறுக்கச் சென்றவர்,

அங்கு காணப்பட்ட வெடிப் பொருளை எடுத்து வந்து அதனுள் காணப்பட்ட வெடி மருந்தை அகற்ற முற்பட்ட போது வெடிபொருள் வெடித்துள்ளது இதன் போது அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.