மியான்மார் இனஅழிப்பு அரசுக்கு ஆதரவு – சூகிக்கு வழங்கப்பட்ட விருதை பறித்தது லண்டன் நகரசபை

மியான்மார் நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆங் சான் சூகி தனது நாட்டின் ரோகிங்கியா முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை கண்டிக்கத் தவறியதுடன், அரசுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட விருதை இரத்துச் செய்வதாக பிரித்தானியாவின் லண்டன் நகரசபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கேக்கில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போதும் சூகி அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதுடன், அரசுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டதாக அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதை பறிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுச்சபை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் சூகி அரச குழு ஒன்றை வழிநடத்தியிருந்தார்.

மியான்மார் அரசுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததாலும், சுதந்திர விண்ணப்ப குழுவின் கடிதங்களுக்கு அவர் பதில் அளிக்காததாலும் 2017ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விருதை இரத்துச் செய்வதாக சுதந்திர பயன்பாடுகள் குழுவின் (City of London Corporation’s Freedom Applications Committee) தலைவர் டேவிட் வூட்டன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக அவர் பல ஆண்டுகள் மேற்கொண்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அகிம்சை போராட்டத்திற்காக அவருக்கு 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.