மினி சூறாவவளி; தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள்.

வவுனியாவில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் 14 வீடுகள் மற்றும் பயன்தரும் மரங்கள் சேதமடைந்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.

இந்நிலையில் வவுனியா கனகராஜன்குளம் வடக்கு பகுதியில் நேற்றய தினம் பெய்த கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளியால் 14 வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டடுள்ளதுடன் பயன்தரும் நிலையில் காணப்பட்ட மரவள்ளி மற்றும் வாழைமரங்களும் சேதமடைந்துள்ளது.

இதேவளை பாதிக்கப்பட்ட பகுதிகளை கனகராஜன்குளம் வடக்கு கிராம சேவகர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இன்றய தினம் பார்வையிட்டிருந்துடன் சேதவிபரங்கள் தொடர்பாக கணக்கிட்டிருந்தனர்.