மாவட்டங்கள் இடையே பயணத் தடை; ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை இடத்துக்கு
இடம் அழைத்துச் செல்வதும் முற்றாகத் தடை
செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
யளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளைக் கொண்டுசெல்வதற்கும்
இடமளிக்கப்படும். விவசாய மற்றும் வர்த்தக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இப்பணிகளைமுறையாக நிர்வகிக்கவேண்டும்.