சிறீலங்காவின் மாத்தளை ராஜபக்சா அனைத்துலக விமான நிலைய முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் முகாமைத்துவத்தை தாம் விரும்பவில்லை என சிறீலங்கா விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா தெரிவித்துள்ளார். 51 விகித பங்குகளை சிறீலங்காவுக்கும் 49 விகித பக்குகளை இந்தியாவுக்கும் வழங்கும் உடன்பாட்டில் இந்தியாவுக்கும் விருப்பமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தாளை விமான நிலையத்தின் உடன்பாட்டை இந்தியாவுக்கு வழங்குவதற்கான அனுமதியை கடந்த வருடம் சிறீலங்கா அமைச்சரவை வழங்கியிருந்தது.