மலையகத் தாய்க்கு இடம் கொடுத்த தொண்டமான்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து அகற்றப்பட்ட ‘மலையக தாய்’ சிலையை கொட்டகலை நகரத்தில் வைப்பதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி கொட்டகலை முத்து விநாயகர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள ‘பிரஜா சக்தி’ நிலையத்தின் மேல் மாடியில் சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மலையக தாயின் சிலை வடிவமைக்கப்பட்டது. இதனை உடன் அகற்றுமாறு கல்லூரியின் பீடாதிபதியால் அன்று மாலையே உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து கடும் எதிர்ப்புகள் வலுத்ததால் கண்காட்சி முடிவடையும் வரையில் சிலையை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த சிலை அங்கிருந்து அங்கற்றப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் தொண்டமானும் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிலையை கொட்டகலை நகரில் வைப்பதற்கு நடவடிக்கை