மற்றும் ஓர் பௌத்த விகாரை சர்ச்சை

நுவரெலியா கந்தப்பளை – கோட் லொஜ் முனுசாமி ஆலய முன்றலில் பௌத்த விகாரை அமைப்பதற்காக பௌத்த மதகுரு ஒருவர் பௌத்த கொடியை நாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கன்னியா மற்றும் நீராவியடி விவகாரத்துடன் இந்த விவகாரமும் பேசப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு தடை விதிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் இது தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட கந்தப்பளை பொலிசார் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.