மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக்கொண்டு மக்களை ஏமாற்றும் குழுவினர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச இலச்சினையுடனான அட்டை ஒன்றை காண்பித்து அவர்கள் மக்களிடம் பல்வேறு முறைக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழு அதிக அவதானம் செலுத்தியுள்ளதோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து வருகை தருவதாக தெரிவித்து எவரேனும் வருகைதந்தால் 1996 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.