மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவகற்கைகள் பீடமானது இலங்கையின் மனிதவள அபிவிருத்தியை நோகக்காககொண்டு கல்விசார் கூட்டுறவு அறிவுப்பரிமாற்றம் மற்றும் திறன்மேம்பாடுமூலம் திறமையான மனிதவள முகாமைத்துவ நிபுணர்களை விருத்திசெய்வதன் பொருட்டு CIPM அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுமேற்கொள்ளப்பட்டது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பம்மைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்ககைழக வவுனியா வளாகத்தில் இன்றயதினம் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமி மற்றும் CIPM இன் தலைவரான தம்மிக பெர்ணாண்டோ ஆகியஇருவராலும் வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி. மங்களேஸ்வரன், வியாபார முகாமைத்துவ பீடாதிபதி நந்தகோபன், முகாமைத்துவ தலைவர் கொட்வின் பிலிப், CIPM இன்தலைவர் நீல் போககலந்தேஇ கல்விவிவகார பணிப்பாளர் வீரதுங்க மற்றும் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

தேசியமற்றும் சர்வதேச மனிதவளத்தின் பயன்பாட்டை மேம்படுத்தவதன் பொருட்டு மனிதவளமுகாமைத்துவத்தின் மூலதத்துவம் நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்வதை கருத்தில்கொண்டு பொது விருப்புகளை பின்பற்றுவதற்காக இரு நிறுவனங்களும் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.

இதன்மூலம் வவுனியா வளாகவியாபார கற்கைள் பீடத்தில் CIPM இன் மனிதவள நிகழ்ச்சிதிட்டங்கள் மற்றும் கற்கைநெறிகள் ஆரம்பிக்கபடவுள்ளமை குறிப்பிடதக்கது.

DSC00443 மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

DSC00477 மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

DSC00486 1 மனிதவள அபிவிருத்தியை நோக்காககொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!