மத விழிபாட்டுத் தளங்களில் நிகழ்வுகளை தவிர்க்குமாறு வேண்டுகோள்

கொரோனா வைரஸ் (COVID 19 ) ஒழிப்பு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுமக்கள் ஒன்றுகூடும் மேலதிக விசேட நிகழ்வுகளை, விழாக்களை, வைபவங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதை மறு அறிவித்தல் வரும் வரை தவிர்க்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை சைவ ஆலயங்களின் நிர்வாகங்கள், தேவாலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.