மட்டு மாநகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு நினைவு வணக்கம்

மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று 14.05.2020 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது இதன்போது, முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்காக  நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.

அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களினது முழுமையான பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.