மட்டக்களப்பில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி!

மட்டக்களப்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் குறிப்பிட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய மக்களுக்கு தேவையான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல் விதிமுறைகளுடன் கடைகளை திறந்து வியாபாரத்தினை மேற்கொள்ள இன்று (17) மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.