மட்டக்களப்பின் எல்லையில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிகந்த பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில், வெலிகந்தையிலிருந்து வடமுனைக்கு செல்லும் போது கிழக்கே 8கிலோமீற்றர் தொலைவில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் ஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றத்தினர் இவ் ஆலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிசங்களை தேடித் தொகுத்து ஆவணப்படுத்தி ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

1900 ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மருத மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வழிபட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

1925ஆம் ஆண்டு முத்துக்கல் உடையாரும் பொது மக்களும் சேர்ந்து ஆலயத்தை அபிவிருத்தி செய்து ஆலயத்திற்குரிய மண்டபம், மடம் அமைத்து 1929ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆலயத்திற்கு நிரந்தரமாக அர்ச்சகரை நியமித்து தினசரி புசையுடன் விசேட புசைகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை, வாழைச்சேனை, தம்மங்கடவை, முத்துக்கல் போன்ற பல பகுதிகளிலுள்ள பொது மக்கள் சேர்ந்து ஆலயத்திற்கு வருடாந்த அலங்கார உற்சவத்தை ஆடி மாதத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

எமது புராதன பொக்கிசங்களையும் தமிழினம் வாழ்ந்த இடங்களையும் மீளவும் பொறுப்பேற்று இடிபாடுகளை திருத்தி பாதுகாக்க வேண்டியது தலையாய கடமை என சமூக ஆர்வலர்களும் நலன் விரும்பிகளும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

weligantha 2 மட்டக்களப்பின் எல்லையில் புராதன ஆலயம் கண்டுபிடிப்புஸ்ரீரமண மகரிசி நற்பணி மன்றமும் இவ்வாலயம் சம்பந்தமான வரலாற்று பொக்கிசங்களை தேடித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை பழைய நிலைக்கு புனரமைத்து வழிபாட்டிற்குரிய இடமாக மாற்றுவதற்கு கிழக்கு இந்து பொது மக்களிடமிருந்து ஆலய அபிவிருத்திக்கான உதவிகளை வேண்டி நிற்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.