மடு திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர்

மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா 15.08 அன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை  மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்திற்குரிய வின்சன் பெர்னான்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைமையில்  அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, குருநாகல் மறைமாவட்ட ஆயர் பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சொருப பவனியும், ஆசியும் இடம்பெற்றது. இதில் நூற்றுக் கணக்கான குருமுதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்