போரை முடித்து வைத்த எனது ஆயுதங்கள்

நாம் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்திருந்த யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போரை முடித்து வைத்தது. அதற்கான அனைத்து ஆயுதங்களும் தன்னுடைய அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித் துள்ளார்.

களனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறினார்.“நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த நிலையிலேயே தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்து ள்ளது. 2005 ஆம் ஆண்டு நான் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டின் பொருளாதார நிலை சிறந்த மட்டத்தை அடைந்தி ருந்தது. தற்போதைய அரசாங்கமும் தவறுகளைச் செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.