‘பொருளாதார நலன்களை முன்னிறுத்தியதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்’-பேராசிரியர் சொம்ஸ்கி

‘பொருளாதார நலன்களை முன்நிறுத்தி எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்’ என தத்துவவாதியும், மசாசுற்றி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரும், 120 இற்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியவருமான பேராசிரியர் நோம் சொம்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

Truthout என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தற்போது அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள தீவிர கொரோனா நெருக்கடி பற்றி அவர் கூறிய கருத்துக்களின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்:

தற்போதைய கொரோனா வைரசின் தாக்கம் என்பது அதிர்ச்சிகரமானது, அதனை கையாள்வதில் அமெரிக்கா மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இவ்வாறான நோய்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் கடந்த பல வருடங்களாக எச்சரித்து வந்திருந்தனர். 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் நோய் கூட கொரோனா வைரசின் ஒரு வகை தான்.

அப்போது அதற்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் அதன் பரிசோதனை இடையில் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரம் தான் நாம் எம்மை இந்த அனர்த்தத்திற்கு எதிராக தயார்படுத்தியிருக்க வேண்டும். இந்த வைரசுக்கு எதிராக ஆரம்பகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால் விஞ்ஞான விளக்கங்கள் குறைவாகவே அன்று இருந்துள்ளது. யாராவது ஒருவர் இதனை முன்னெடுத்திருக்க வேண்டும்.

ஆனால் பொருளாதார நலன்களால் இந்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது. அதாவது எதிர்கால அனர்த்தத்தை தடுப்பதற்கான தயாரிப்புக்கள் மூலம் அவர்களுக்கு தற்போது லாபம் கிடைக்காது என்பதே சந்தை வாய்ப்பின் நிலை.

அரசு அதனை முன்னெடுத்திருக்க வேண்டும் ஆனால் ஆளும் அரசியல் கட்சிகளால் அது தடுக்கப்பட்டது. முடிவெடுக்கும் அதிகாரத்தை நாம் வியாபார உலகத்திடமே விட்டு விடுகிறோம். அவர்களில் இலாபத்தில் தலையிடும் உரிமையை பொதுநலவாதிகளுக்கு நாம் கொடுப்பதில்லை என முன்னர் அமெரிக்க அரச தலைவர் றொனால்ட் றீகன் சிறிய சிரிப்புடன் எமக்கு கூறியது தற்போதும் நினைவில் உள்ளது.

அன்றில் இருந்து புதிய தாராளவாத கொள்கை முதாலளித்துவத்திற்கு ஊட்டப்பட்டு அது சந்தை வாய்பாக மாறியது. அதன் விளைவு என்னவெனில் நாடகக்கரர்கள், படுகொலையாளிகள் மற்றும் தோல்வியுற்றவர்கள் என நாம் மாறியுள்ளோம். செயற்கை சுவாச உபகரணங்களின் (ventilators) பற்றாக்குறையே தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது.

ஆனால் இந்த பிரச்சனையை முன்னரே உணர்ந்த சுகாதர சேவைகள் திணைக்களம், செலவு குறைந்த, இலகுவாக பயன்படுத்தக்கூடிய செயற்கை சுவாச உபகரணங்களை தயாரிக்கும் பணியை ஒரு சிறிய நிறுவனத்திடம் வழங்கியது.
ஆனால் அங்கும் முதலாளித்துவம் தலையிட்டது.06053d15d0204355b6c94ea8b2ef7f14 18 'பொருளாதார நலன்களை முன்னிறுத்தியதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்'-பேராசிரியர் சொம்ஸ்கி

கோவிடியன் என்ற பெரிய நிறுவனம் அந்த சிறிய நிறுவனத்தை வாங்கியது. ஆதன் பின்னர் செயற்கை சுவாச உபகரணங்களின் தயாரிப்பால் தமக்கு இலாபம் இல்லை என கூறி 2014ஆம் ஆண்டு அதன் உற்பத்தியை நிறுத்தியது. தமது இந்த திட்டத்தை அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

வியாபாரிகளின் புதிய தாராளவாதக் கொள்கைகள் தான் தற்போது அரசுகளை வழிநடத்துகின்றன. அவர்கள் தமது சந்தைகளை பாதுகாக்கின்றனர். அதுவே தற்போதைய பேரனர்த்தத்திற்கு காரணம். ஜே.பி மோர்கன் எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரும் வங்கியின் இரகசிய ஆவணம் என்ன கூறுகின்றது என்றால், மனிதாபிமானத்தை தக்கவைப்பது எமது கொள்கைகளுக்கு ஆபத்தானது என்று. இதில் வங்கி வைத்திருக்கும் எரிபொருள் முதலீடுகளும் உள்ளடக்கம். எனவே தான் செவ்ரோன் என்ற அமெரிக்காவின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனம் இலாபம் தரும் எரிபொருள் தயாரிக்கும் பணிகளை நிறுத்தி அதிக இலாபம் தரும் உலகில் உள்ள உயிர்களை அழிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

அதிக விலை கொடுத்தும், வறிய மக்களை பலி கொடுத்து கோவிட்-19 இல் இருந்து நாம் தப்பினாலும், பனிக்கட்டிகள் உருகி காலநிலையில் ஏற்படும் மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவை மிகப்பெரும் ஆபத்தாகவே உள்ளன.

தற்போதைய அனர்த்தம் தொடர்பில் அமெரிக்க அரசுக்கு முன்னரே தெரியும். எனவே தான் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் உயர் மட்டங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர்கள் இலபத்தையே அதிகம் பார்த்தனர் உயிர்களை அல்ல. அதாவது வரலாற்றில் மிகப்பெரும் குற்றம் இது.

இந்த நோய் தொடர்பில் டிசம்பர் 31 உலக சுகாதர நிறுவனத்திற்கு சீனா தெரிவித்திருந்தது. பின்னர் ஜனவரி 7 ஆம் நாள் இது கொரோனா வைரஸ் எனவும், அதன் பரம்பரை அலகை தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனை ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் டொனால்ட் டிறம்பினிடம் தெரிவிக்க அமெரிக்காவின் புலனாய்வுத்துறை முயற்சிகளை எடுத்தது ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அவர் எதுவும் செய்யாமல் இருக்கவில்லை. இது ஒரு சாதாரண இருமல் எல்லாம் எமது கட்டுப்பாட்டில் உள்ளன என மக்களுக்கு தெரிவித்தார். ஆனால் அவருக்கு இது ஒரு உலகை அச்சுறுத்தும் நோய் என்பது தெரியும். பொய்களால் உண்மையை மறைத்தனர்.

பெப்ரவரி 10 ஆம் நாள் அமெரிக்காவுக்குள் நோய் பரவியது. ஆனால் அந்த மாதம் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கான நிதி குறைக்கப்பட்டு படைத்துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டிருந்தது.
எனவே தான் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்யும் அளவு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கின்றது. மிகத்தரமான வைத்தியசாலைகளில் கூட அடிப்படை உபகரணங்கள் இல்லை.'பொருளாதார நலன்களை முன்னிறுத்தியதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்'-பேராசிரியர் சொம்ஸ்கி

எனவே தான் கொரோனா நோயின் மையப்புள்ளியாக தற்போது அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளது.அமெரிக்காவின் தற்போதைய அனர்த்தத்திற்கு நாம் ட்ரம்ப் ஐ குறைகூறுவதை விட அவரை பதவிக்கு கொண்டு வந்த தகுதியற்ற சமூகத்தை தான் நாம் குறை கூறவேண்டும். அதனால் தான் எதிர்காலத்தில் அனர்த்தங்களை தவிர்க்க முடியும். ஏனெனில் இந்த சமூகம் 40 வருடமாக வேரூன்றிய புதிய தாராளவாதக் கொள்கைகளால் உருவாக்கப்பட்டது.

இது றீகன், மாக்கிரட் தச்சர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. முதலாளிகளின் வரியை விலக்கி அதனை மக்கள் மீது திணிப்பதே அன்று தொடக்கம் இன்றுவரை உள்ள அரசுகளின் கொள்கை. அதன் மூலம் தான் பங்குச்சந்தை முதலாளிகளை காப்பாற்ற முடியும். எனவே தான் இந்த உலகில் உள்ள 20 விகிதமான செல்வத்தை 0.1 விகித செல்வந்த மக்கள் கொண்டுள்ளனர்.

தமிழில்- ஆர்த்திகன்