பெறுபேறுகள் இன்று மாலை வெளியீடு.

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

இதன்போது 7 லட்சத்து 17 ஆயிரத்து எட்டு பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றி இருந்ததாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.